ஜம்மு & காஷ்மீர் : 4ஜி இணைய சேவைகளுக்கு ஆகஸ்ட் 19 வரை தடை.!
ஜம்மு & காஷ்மீர் : 4ஜி இணைய சேவைகளுக்கு ஆகஸ்ட் 19 வரை தடை.!
By : Kathir Webdesk
ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அதிவேக 4G இணையதள சேவைக்குரிய தடையை வரும் ஆகஸ்ட் 19 வரை நீட்டித்துள்ளதாக நேற்று (29 ஜூலை) ஜம்மு & காஷ்மீர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜம்மு & காஷ்மீர் முதன்மை செயலாளர் ஷலீன் கப்ரா வெளியிட்ட உத்தரவில், அதிவேக 4G மொபைல் இணையதள சேவையைக் கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம். ஏனென்றால் அதிவேக இணையச் சேவையைத் தவறாக பயன்படுத்தி பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரை தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்கக்கூடும் என்று அவர் விளக்கம் அளித்தார்.
புதிய அரசியலமைப்பு மாற்றங்கள் அறிமுகப்படுத்தி ஒரு வருடம் நிறைவடையும் நிலையில் வரும் வாரங்களில் தேச விரோத நடவடிக்கைகள் அதிகரிக்கக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளதாகவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தியாவில் பொது ஒழுங்கு, இறையாண்மை, தேசபாதுகாப்பு முதலியவற்றைப் பேணிக்காப்பதற்கு இந்நடவடிக்கை அவசியமானது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அதிவேக இணையதள சேவை தடைசெய்யப்பட்ட இந்நாட்களில் 2ஜி இணையதள சேவையை பயந்துத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது 4ஜி இணைய சேவை ஜம்மு & காஷ்மீரில் விரைவில் திரும்பத்தரப்படும் என்று பலரும் எதிர்பார்த்தநிலையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த எதிர்பார்ப்பானது லெப்டினன்ட் ஆளுநர் G C முர்மு வெளியிட்ட அறிக்கையில் 4ஜி இணைய சேவையை திருப்பிக் கொடுப்பதில் எந்த தடையும் இல்லை என்று கூறப்பட்ட பிறகே ஏற்பட்டது.
source:https://swarajyamag.com/insta/jk-administration-extends-ban-on-high-speed-internet-in-ut-till-19-august-due-to-security-concerns