'4G இணையதள சேவையை திருப்பிக் கொடுப்பதில் பிரச்சினை இல்லை" - ஜம்மு & காஷ்மீர் நிர்வாகம் மத்திய அரசுக்கு பரிந்துரை.!
'4G இணையதள சேவையை திருப்பிக் கொடுப்பதில் பிரச்சினை இல்லை" - ஜம்மு & காஷ்மீர் நிர்வாகம் மத்திய அரசுக்கு பரிந்துரை.!
By : Kathir Webdesk
4G இணைய சேவைகளை ஜம்மு காஷ்மீருக்கு திருப்பிக் கொடுப்பதில் ஆட்சேபனை இல்லை என்று ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அளித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது
"2கி யாக இருந்தாலும் சரி அல்லது 4G ஆக இருந்தாலும் சரி, பாகிஸ்தான் தனது பிரச்சாரத்தை செய்யத் தான் போகிறது. எனவே 4G ஒரு பிரச்சினையாக இருக்காது, மேலும் அதை மக்கள் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்று நான் பயப்படவில்லை, அதில் எந்த சிக்கலையும் காணவில்லை" என்றும் லெப்டினன்ட் கவர்னர் GC முர்மு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். இது மே மாதத்திலிருந்த நிலைமைக்கு ஒரு முக்கிய மாறுதலாக ஜம்மு &காஷ்மீர் நிர்வாகம் கருதுகிறது.
இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றி, 4G இணைய சேவைகளை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசு ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. இந்த சிறப்புக் குழு, மே 15 மற்றும் ஜூன் 10 ஆகிய தேதிகளில் இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளதாக உயர் நீதிமன்றத்திற்கு அரசாங்கம் தெரிவித்தது. அதில் அவர்கள் "தற்போது மேற்கொள்ளப்படும் 4G சேவைகள் உட்பட இணைய சேவைகளில் அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளில் எந்த தளர்வும் இல்லை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source:https://indianexpress.com/article/india/jammu-kashmir-4g-internet-services-home-ministry-6523563/