Begin typing your search above and press return to search.
கொரோனா எதிரொலி: புதுச்சேரியில் 5-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை!
கொரோனா எதிரொலி: புதுச்சேரியில் 5-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை!

By :
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் உள்ள மழலையர் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க புதுச்சேரி மாநில அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை நாளை முதல் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டதாகவும், மீறி பள்ளிகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story