தமிழ்நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 571 பேரில் 522 பேர் தப்லிகி ஜமாஅத் நிகழ்வோடு தொடர்புடையவர்கள்!
தமிழ்நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 571 பேரில் 522 பேர் தப்லிகி ஜமாஅத் நிகழ்வோடு தொடர்புடையவர்கள்!
By : Kathir Webdesk
தமிழ்நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 571 பேரில் 522 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாஅத் நிகழ்வோடு தொடர்புடையவர்கள்என்று கூறப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் டெல்லியில் நடந்த இஸ்லாமிய நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் புதிதாக 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலும் மேலும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.
டெல்லியில் நடந்த நிஜாமுதீன் நிகழ்வு இந்தியாவில் கொரோனா சந்தேக விகிதத்தை அதிகரிக்க பங்களித்துள்ளது. ஜமாஅத்தின் காரணமாக, கொரோனா பாதிப்பின் இரட்டிப்பாக்க விகிதம், எடுக்கும் நாட்கள் 4.1 நாட்களை எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஜமாஅத் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்திருந்தால் இரட்டிப்பு விகிதம் 7.4 நாட்களாக இருந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. டெல்லி நிகழ்வு கொரோனா பரவல் விகிதத்தை அதிகரித்துள்ளது.