Kathir News
Begin typing your search above and press return to search.

6 வயது சிறுவன், CRPF வீரரை கொன்ற பயங்கரவாதி காஷ்மீர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

6 வயது சிறுவன், CRPF வீரரை கொன்ற பயங்கரவாதி காஷ்மீர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

6 வயது சிறுவன், CRPF வீரரை கொன்ற பயங்கரவாதி காஷ்மீர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 July 2020 3:51 AM GMT

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெகரா பகுதியில் கடந்த மாதம் 26-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத் திய தாக்குதலில் 6 வயது சிறுவனும், சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி அங்குள்ள மால்பா பகுதியில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இந்த பகுதிக்கு மாநில போலீசாரும் பாதுகாப்பு படையினரும் விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், சிறுவன் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரரை கொன்ற ஜாஹித்தாஸ் என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த சண்டையின் போது சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "என்கவுண்ட்டரில் ஜாஹித் தாஸ் கொல்லப்பட்டது மாநில போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி" என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News