Kathir News
Begin typing your search above and press return to search.

கிளென்மார்க் மருந்து நிறுவனம் உற்பத்தி செய்த கொரோனா தடுப்பு மாத்திரை 70 சதவீதம் வெற்றி.!

கிளென்மார்க் மருந்து நிறுவனம் உற்பத்தி செய்த கொரோனா தடுப்பு மாத்திரை 70 சதவீதம் வெற்றி.!

கிளென்மார்க் மருந்து நிறுவனம் உற்பத்தி செய்த கொரோனா தடுப்பு மாத்திரை 70 சதவீதம் வெற்றி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 5:53 AM GMT

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக நாடுகள் தத்தளித்து வருகிறது. உலக அளவில் அமெரிக்காவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அழிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து வருகிறது. ஆனால் இதுவரை முழுமையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது சில நாடுகள் கண்டுபிடித்த மருந்துகளை சோதனை அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல மருந்து நிறுவனமான கிளென்மார்க் நிறுவனம், கொரோனா வைரஸ்க்கு எதிரான பேபிபுளூ என்கிற தடுப்பு மாத்திரையை உற்பத்தி உள்ளது. அந்த மருந்தை விநியோகம் செய்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது.

இந்த பேபிபிளு (fabi flu) என்கிற மருந்தை சோதனை அடிப்படையில் 150 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு மற்ற மருந்துகளை விட கிளென்மார்க் நிறுவனம் உற்பத்தி செய்த மருந்து நன்றாக பலன் கொடுக்கிறது எனவும் மற்றும் முதல் இரு கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இதற்கான மூன்றாம் கட்ட பரிசோதனையில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் சென்ற ஜூன் 20ஆம் தேதி கிளென்மார்க் மருந்து நிறுவனம் தங்களுடைய மருந்தை பரிசோதனை அடிப்படையில் ததன்னார்வலர்களுக்கு கொடுத்துள்ளது.

இதனால், 3ஆம் கட்ட சோதனை முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஜூன் 20ஆம் தேதி கிளென்மார்க் நிறுவனம் தங்கள் மருந்தை சோதனை அடிப்படையில் தன்னார்வலர்களுக்கு அளித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News