இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 76% ஆண்கள், 24% பெண்கள்..
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 76% ஆண்கள், 24% பெண்கள்..
By : Kathir Webdesk
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 21நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை குறித்து சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியது: 24 மணி நேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 693 ஆகும். இதுவரை இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 1400 மேற்பட்டோர் டெல்லியில் நடந்த தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள். மேலும் இந்தியாவில் இதுவரை 109 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் 76% ஆண்கள் மற்றும் 24% பெண்கள் என தெரிவித்துள்ளார். கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் 47%, 40 வயது குறைவாக உள்ளவர்கள். 34%, 40 முதல் 60 வயது உள்ளவர்கள். 19%, 60 வயது மற்றும் அதற்கு அதிகமானவர்கள்.
இதில் பலியானவர்களில் 73% ஆண்கள் மற்றும் 27% பெண்கள் உள்ளனர். 63%, 60 வயது மற்றும் அதற்கு அதிகமானவர்கள், 30%, 40 வயது முதல் 60 வயதுக்கு உள்ளவர்கள். 7%, 40 வயது குறைவாக உள்ளவர்கள்.
இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.