Kathir News
Begin typing your search above and press return to search.

வடக்கு காஷ்மீரில் பா.ஜ.க. தலைவர் தந்தை, சகோதரருடன் சுட்டுக் கொலை - 8 கமாண்டோக்கள் பாதுகாப்பு மத்தியிலும் பயங்கரவாதிகள் கைவரிசை.!

வடக்கு காஷ்மீரில் பா.ஜ.க. தலைவர் தந்தை, சகோதரருடன் சுட்டுக் கொலை - 8 கமாண்டோக்கள் பாதுகாப்பு மத்தியிலும் பயங்கரவாதிகள் கைவரிசை.!

வடக்கு காஷ்மீரில் பா.ஜ.க. தலைவர் தந்தை, சகோதரருடன் சுட்டுக் கொலை - 8 கமாண்டோக்கள் பாதுகாப்பு மத்தியிலும் பயங்கரவாதிகள் கைவரிசை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 July 2020 6:19 AM GMT

வடக்கு காஷ்மீரில் உள்ள பண்டிபோரா மாவட்டத்தின் பாஜக தலைவர் வாசிம் பாரி. இவர் பாண்டிபோராவுக்கான முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவராகவும் இருந்தார்.

இவர் தனது கடையில் நேற்று மாலை தனது தந்தை மற்றும் சகோதரர் உடன் இருந்தபோது அடையாளம் தெரியாதபயங்கரவாதிகளால் 3 பேருமே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களது குடும்பத்தில் மொத்தம் எட்டுபேர் உள்ளதாகவும் ஆனால் அதிஷ்டவசமாக அவர்களில் மற்றவர்கள் அப்போது சம்பவ இடத்தில் இல்லாததால் உயிர் பிழைத்ததகவும் கூறப்படுகிறது.

இது குறித்து காஷ்மீர் டி ஜி பி தில்பாக் சிங் கூறுகையில் " ஐ ஏ என் எஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதே சமயம் பாஜக தலைவர்களின் பாதுகாப்புக்காக அப்பகுதியில் நியமிக்கப்பட்டிருந்த எட்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜகவின் இளம் தலைவர் மரணம் அடைந்தது அதிர்ச்சியளிப்பதாகவும் , அவருடைய தந்தையும் ஒரு நல்ல பாஜக மூத்த தலைவர் என்றும் கூறினார். எட்டு பேர் கொண்ட பாதுகாப்பு கமாண்டோக்கள் நியமிக்கப்பட்ட நிலையிலும் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது மிகவும் துரதிஷ்டவசமானது என்றும் கூறியுள்ளார்.

https://swarajyamag.com/insta/bjp-leader-wasim-bari-shot-dead-by-terrorists-in-kashmirs-bandipore-along-with-father-and-brother

Next Story
கதிர் தொகுப்பு
Trending News