Kathir News
Begin typing your search above and press return to search.

வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 8 பேருக்கு கொரோனோ தொற்று.! #Covid19

வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 8 பேருக்கு கொரோனோ தொற்று.! #Covid19

வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 8 பேருக்கு கொரோனோ தொற்று.! #Covid19

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jun 2020 3:35 AM GMT

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த 17 ஆயிரத்து 36 பேர் சிறப்பு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் ஏற்கனவே 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

இந்நிலையில் முகாமில் தங்கி இருந்தவர்களில் சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பேர், சவுதி அரேபியாவில் இருந்து வந்த 2 பேர், மாலத்தீவு, கத்தார், மலேசியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவர் என மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

அதேபோல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 52 ஆயிரத்து 465 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் 80 பேருக்கும் அடையாறு மண்டலத்தில் 75 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 16 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 53 பேருக்கும் நேற்று கொரோனோ தொற்று உறுதியானது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News