Begin typing your search above and press return to search.
சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள 92 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு.!
சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள 92 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு.!
By : Kathir Webdesk
சென்னை ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு வேலையில் செயல்படும் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 92 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் வேலையில் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 92 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதன் பின்னர் அவர்களை அண்ணா பல்கலைகழகத்தில் அமைந்துள்ள கொரோனா மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநாகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆளுநர் மாளிகை பாதுகாப்பிற்காக வேறு படை வீரர்களை அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story