கொரோனா பிரச்சினையில் மோடி அரசு சிறப்பாக செயல்படுவதாக 93 சதவீத இந்தியர்கள் கருத்து.!
கொரோனா பிரச்சினையில் மோடி அரசு சிறப்பாக செயல்படுவதாக 93 சதவீத இந்தியர்கள் கருத்து.!

கொரோனா பிரச்சினையில் மோடி அரசு சிறப்பாக செயல்படுவதாக ஐஏஎன்எஸ், சிவோட்டர்ஸ் கணிப்பில் 93 சதவீத இந்தியர்கள் கருத்து.
இந்தியாவின் மிக சிறந்த கருத்துக் கணிப்பாளர்கள் என கருதப்படும் ஐஏஎன்எஸ், சிவோட்டர்ஸ் கருத்தாய்வு நிபுணர்கள் குழு இணைந்து மார்ச் 16 முதல் ஏப்ரல் 21-ம் தேதிவரை கருத்துக் கணிப்பு நடத்தினர். இதில் 4,718 பேர் பங்கேற்று தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பிரச்சினை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எவ்வாறு கையாள்கிறது என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதில் கரோனா வைரஸ் பிரச்சினையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிறப்பாகக் கையாள்வதாக 93.6 சதவீத மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 4.7 சதவீதம் பேர் மட்டுமே இதை மறுத்துள்ளனர். அதேசமயம், முதல்கட்ட லாக்டவுன் முடிந்துள்ள நிலையில் 2-ம் கட்ட லாக்டவுனில் மக்கள் தங்களை நன்கு தயார்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்
இந்த கருத்துக்கணிப்பு தொடங்கப்பட்டபோது பிரதமர்மோடி அரசின் செயல்பாடுகள் மீது 75.8 சதவீதம் மக்களுக்கு மட்டுமே கரோனா வைரஸ் பிரச்சினையை சிறப்பாகக் கையாள்வார் என்ற நம்பி்க்கை இருந்தது. ஆனால் கருத்துக்கணிப்பு முடிவில் பிரதமர் மோடி அரசின் மீது அதிருப்தி தெரிவித்தவர்கள் கரோனா வைரஸ் செயல்பாட்டில் அரசின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவி்த்துள்ளனர் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.