Kathir News
Begin typing your search above and press return to search.

சினிமாவில் நடிகர் விஜய் உபதேசம்: வெளியே ரசிகர்கள் ரௌடியிசம்! இது தான் ஒரு விரல் புரட்சி.!

சினிமாவில் நடிகர் விஜய் உபதேசம்: வெளியே ரசிகர்கள் ரௌடியிசம்! இது தான் ஒரு விரல் புரட்சி.!

சினிமாவில் நடிகர் விஜய் உபதேசம்: வெளியே ரசிகர்கள் ரௌடியிசம்! இது தான் ஒரு விரல் புரட்சி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Oct 2019 5:28 AM GMT


நேற்று வெளியான நடிகர் விஜயின் பிகில் படத்தில் நல்ல பழக்க வழக்கங்கள் குறித்து விஜய் பொது மக்களுக்கு அறிவுரை கூறும் 'பஞ்ச்' வசனங்கள் நிறையவே உள்ளன. ஆனால் விஜய் ரசிகர்கள் நேற்று காலிகளாக மாறி படவெளியீட்டின் போது பொது மக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் ஏற்படுத்திய சம்பவங்களைக் கண்டு அனைவரும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர்.


தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜயின் பிகில் படம் நேற்று வெளியானது. அதில் சர்ச்சைக்குரிய ஒரு சிறப்புக் காட்சி அனுமதிக்கப்படவில்லை. இதனால் 600 க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் இப்படம் ஓடிக் கொண்டிருந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். பலர் ரகளை செய்து கொண்டிருந்தனர்.






இந்த நிலையில் அதிகாலை சிறப்புக் காட்சி வெளியானது. அதற்கு முன்பாக நள்ளிரவு காட்சியில் சிறப்புக் காட்சி வெளியாகும் என எதிர்பார்த்த கிருஷ்ணகிரி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததால் அவர்கள் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள தியேட்டர் அருகே போலீசாரின் தடுப்புக்களையும், சிசிடிவி கேமிராக்களையும் உடைத்தனர். கல்வீச்சில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 34 பேரை பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.




https://www.youtube.com/watch?v=fDw9_H4kKWA


https://m.facebook.com/story.php?story_fbid=179931196520438&id=100035106773335


தமிழகத்தின் பல இடங்களிலும் தியேட்டரிலும், தியேட்டர் பகுதிகளிலும் ரசிகர்கள் கண்ணியத்தை தவறவிட்டுவிட்டு படத்தின் பெயருக்கேற்றது போல பிகில் அடிச்சான் குஞ்சுகள் போல செயல் பட்டதைப் பார்த்த பொது மக்கள் குறிப்பாக பெண்கள் ரசிகர்களின் அநாகரீகமான செயல்பாட்டை பார்த்து வேதனை அடைந்ததாக செய்திகள் வெளி வந்துள்ளன. இந்த நிலையில் தனது ரசிகர்களின் மோசமான செயல்பாடுகளுக்கு வருத்தமோ, கண்டனமோ தெரிவிக்காத நடிகர் விஜய் நேற்று தனது அடுத்த படம் ஒன்றுக்கான ஒப்பந்தம் குறித்து தீவிரமான பணிகளில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
பணம் சம்பாதிக்கும் வெறிக்காக சினிமா மூலம் ஊருக்கு உபதேசம் செய்து கொண்டு ஏழை குடும்பங்களை சேர்ந்த , வேலை வெட்டி இல்லாத ரசிகர்களை பகடைக் காய்களாக்கி வரும் நிலை குறித்து பொது மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News