கரோனா - மக்களுக்கு உதவக் கால் செண்டரில் வேலை செய்யும் நடிகை.!
கரோனா - மக்களுக்கு உதவக் கால் செண்டரில் வேலை செய்யும் நடிகை.!
By : Kathir Webdesk
இந்த நூற்றாண்டின் பெரிய அச்சுறுத்தலான கரோனா இருந்து வருகிறது. இதனால் பல விதத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இதில் தமிழல் 'வெற்றிவேல்', 'கிடாரி', 'தம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்த கேரளாவைச் சேர்ந்த நடிகை நிகிலா விமல் மக்களுக்கு உதவும் பொருட்டு கஜானாவுக்காகக் கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக கால் செண்டரில் பணியாற்றி வருகிறார். அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் தேவைப்படுகிறது என்று வரும் தொலைப்பேசி அழைப்புகளை எடுத்துப் பேசி, என்ன வேண்டுமெனப் பட்டியலிட்டு, அதை உரிய அதிகாரிகளுக்கு அனுப்புவது தான் இவர் தற்போது மேற் கொண்டுவரும் பணி.
பிரபலமானவர்கள் மக்கள் சேவைக்கு முன் வரவேண்டும் என்று உதவி மையம் கூறியதால் தானாக முன் வந்து இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் நிகிலா, அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் எங்கள் தன்னார்வலர்கள் மூலம் அவர்கள் வீட்டுக்கு அந்தப் பொருட்களைச் சென்றுசேர்ப்பதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் பேசுபவர்களிடம் தான் தன் பெயரைக் கூட அவர்களிடம் தெரிவிப்பதில்லை. இந்த பணிக்காகத் தனது வீட்டிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறாராம். தன்னால் இந்த சூழலில் ஏதோ ஒரு விதத்தில் மக்களுக்கு உதவ முடிவதில் மகிழ்ச்சி என்று கூறுபவர், கரோனா காரணமாகப் பயணக் கட்டுப்பாடு அமலில் இருப்பதாக தன்னால் தினமும் உதவி மையத்துக்குச் செல்ல முடியவில்லை என வருத்தப்படுகிறார்.