கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் அ.தி.மு.க ஆதரவு அளிக்கும் - நவநீத கிருஷ்ணன்.
கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் அ.தி.மு.க ஆதரவு அளிக்கும் - நவநீத கிருஷ்ணன்.
By : Kathir Webdesk
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அ.தி.மு.க சார்பில் நவநீத கிருஷ்ணன் எம் பி கலந்து கொண்டார், பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "கொரோனா தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் அ.தி.மு.க ஆதரவு அளிக்கும்" என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி உடனான ஆலோசனையில் தமிழகத்திற்கு வட மாநிலங்களில் இருந்து வரும் அத்தியாவசியப் பொருட்களை எந்த மாநிலத்திலும் தடைபடக் கூடாது. அது தடையின்றி தமிழகம் வந்து சேர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததாகவும் அதனை பிரதமர் குறித்து கொண்டதாக கூறியவர். மேலும் கொரோனா வைரசால் இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம்தான் பாதிக்கப்பட்டுள்ளதை, முதலமைச்சர் பிரதமரிடம் சொல்ல சொன்னதாகவும் அதை பிரதமரிடம் கூறியதாக தெரிவித்தார்.