அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படம் சீனாவில் ரிலீஸ் !! அனைத்து அம்சங்களும் சூப்பராம்!!
அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படம் சீனாவில் ரிலீஸ் !! அனைத்து அம்சங்களும் சூப்பராம்!!
By : Kathir Webdesk
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் சீனாவில் வெளியிடப்பட உள்ளதாக அதன் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சன், டாப்சி ஆகியோர் நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் இந்தி படம் அஜித் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் பாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ள நேர் கொண்ட பார்வை திரைப்படம் அடுத்த மாதம் 8-ம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்தப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் வெளியாகும் அதே நாளில் சீனாவில் நேர் கொண்ட பார்வை வெளியிடப்படும் என்று போனி கபூர் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:-
பிங்க் படத்தின் கதையை மட்டும் வைத்துக் கொண்டு அஜித்துக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து தமிழில் உருவாக்கியிருக்கிறோம். அஜித்தின் மாஸ் இமேஜை மனதில் வைத்து இயக்குனர் வினோத் படத்தை இயக்கி உள்ளார்.
இந்தியப் படங்களுக்கு சீனாவில் தற்போது நல்ல வரவேற்பு இருக்கிறது. அங்கு கிட்டத்தட்ட 50 ஆயிரம் திரையரங்குகள் உள்ளன. அனைத்து அம்சங்களும் நன்றாக இருப்பதால் சீனாவில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 2017-ம் ஆண்டு ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ திரைப்படம் சீனாவில் வெளியாகி பெரும் வசூலை பெற்றது. அந்த வகையில் போனி கபூர் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தையும் சீனாவில் திரையிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.