Begin typing your search above and press return to search.
ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு பைக்கில் பயணம் செய்த அஜீத்..
ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு பைக்கில் பயணம் செய்த அஜீத்..

By :
'நேர்கொண்ட பார்வை' படத்தினை தொடர்ந்து H.வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தினில் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது.
ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அஜீத் பைக்கில் பயணம் செய்யும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த பைக் பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்குக் கடைசி நாள் படப்பிடிப்பு நடைபெற்ற போது அந்த பைக்கிலேயே தான் சென்னைக்குத் திரும்பவிருப்பதாக அஜீத் தெரிவித்துள்ளார். அவ்வளவும் தூரம் தனியாகப் பயணிக்க வேண்டுமா எனப் படக்குழு பதற்றமடைய, அவர்களைச் சமாதானம் செய்து விட்டு சென்னைக்கு பைக்கிலேயே திரும்பியுள்ளார் அஜீத்.
Next Story