Begin typing your search above and press return to search.
இனி மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கைது - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
இனி மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கைது - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

By :
சென்னை: மது குடித்துவிட்டு போதையில் மோட்டர் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலை விபத்தில் காயம் அடைந்து அதிகம் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
மது குடித்துவிட்டு போதையில் மோட்டர் வாகனம் ஓட்டும் நபரை கைது செய்வதுடன், அவர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும்.
மதுபோதையில் மோட்டர் வாகனம் ஓட்டும் நபரை கண்காணிக்க, தனி காவல்துறை பிரிவை ஏற்படுத்த வேண்டும். கைது செய்யும் நபர்களை பற்றிய அறிக்கையை மாதம் தோறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story