தொழுகையை தடுக்க சென்ற போலீசார் மற்றும் பெரியோர்கள் மீது தாக்குதல்: வாலிபர் கும்பல் வெறிச்செயல்..
தொழுகையை தடுக்க சென்ற போலீசார் மற்றும் பெரியோர்கள் மீது தாக்குதல்: வாலிபர் கும்பல் வெறிச்செயல்..
By : Kathir Webdesk
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளியில் கும்பலாக கூடி சமய நிகழ்ச்சிகளை நடத்துவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் வேண்டுமென்றே பல வாலிபர்கள் ஓன்று சேர்ந்து தொழுகை என்ற பெயரில் அரசு உத்தரவுக்கு எதிராக ஓன்று சேர்ந்தனர். பல முஸ்லிம் பெரியவர்கள் சொல்லியும் அவர்கள் கேட்காமல் வேண்டுமென்றே தொழுகை நடத்த முயன்றனர். இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் ஓன்று சேர்ந்தனர்.
இந்த நிலையில், போலீசார் அங்கு சென்று தொழுகை நடத்துவதை தடுக்க முயன்றனர். அப்போது போலீஸ் மீது அந்த இளைஞர்கள் சரமாரியாக கல்வீசினர். இந்த சம்பவத்தில் பெண் போலீஸ் உள்பட 4 காவலர்கள் மற்றும் சமாதானப்படுத்த சென்ற முஸ்லிம் சமுதாய தலைவர்கள் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
sources:https://www.indiatvnews.com/news/india/cops-attacked-after-they-stopped-mosque-prayer-in-karnataka