ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கொரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வரும் பிரதமர் மோடி!
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கொரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வரும் பிரதமர் மோடி!
By : Kathir Webdesk
அயோத்தி வந்தடைந்த பிரதமர் அங்கிருந்து முதலாவதாக அனுமன் கோயிலுக்குச் சென்றார். அவருடன் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மட்டுமே இருந்தார்.
பிரதமர் கலந்துகொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் அவருடன் இருக்கும் அனைவரும் முகக் கவசம் அணிந்துகொண்டு முறையான சமூக இடைவெளியைப் பின்பற்றி வருகின்றனர். கோயிலுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாகத் தன் கைகளைத் கழுவிய பிரதமர், பிறகே சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து அனுமன் கோயில் நிர்வாகிகள் ராமர் பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளியால் ஆன கிரீடத்தை பிரதமருக்கு பரிசாக வழங்கினர்.
பின்னர் 5 நிமிட பயணத்துக்குப் பிறகு ராமர் கோயிலுக்கு சென்ற பிரதமர், அங்கும் முதலாவதாகத் தன் கைகளைக் கழுவிய பின்னரே கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தார்.
தொடர்ந்து அங்கிருந்து நேரடியாக அடிக்கல் நாட்டு விழா நடக்கும் மேடைக்குச் சென்றார். அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டுள்ள பிரதமர், கொரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வருகிறார்.