தீவிரவாதத் தாக்குதல் உளவு எச்சரிக்கை - அயோத்தி நகரில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!
இந்த பாதுகாப்பு எச்சரிக்கை ஆகஸ்ட் 15, சுதந்திர தினம் வரை இருக்கும் .
By : Kathir Webdesk
அயோத்தியில், ஆகஸ்ட் 5ல் ராமர் கோயிலின் 'பூமி பூஜை' விழா நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் வருகை தர உள்ள நிலையில், இவ்விழாவை நாசப்படுத்த பயங்கரவாத குழுக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் மாநில காவல்துறையினரை எச்சரித்துள்ளன. எனவே அனைத்து சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் பிரிவுகளும் உத்தரப்பிரதேசத்தில் அதிக எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் ISI ஆதரவு பயங்கரவாத அமைப்பால் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்படலாம் என்று மாநில அரசுடன் பகிரப்பட்ட உளவுக்குறிப்பின் விவரங்கள் கூறுகின்றன. லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-ஐ முஹம்மது ஆகியவற்றின் உயர் தலைமைக்கு இந்த தாக்குதலை நடத்துமாறு ISI உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் ஒரு தனி மனித தாக்குதலாகவோ அல்லது நெரிசலான இடத்தில் தாக்குதலாகவோ இருக்கலாம். மனித உளவுத்துறை மற்றும் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில், பயங்கரவாதிகளின் ஒரு சிறிய குழு நாட்டிற்குள் ஊடுருவக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அதிகாரபூர்வ வட்டாரங்களின்படி, 'பூமி பூஜை' விழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லா நேரத்திலும் இருக்கும், இது தற்செயலாக, காஷ்மீரில் 370வது பிரிவை ரத்து செய்த முதல் ஆண்டு நிறைவுடன் ஒத்துப்போகிறது. எனவே இந்த பாதுகாப்பு எச்சரிக்கை ஆகஸ்ட் 15, சுதந்திர தினம் வரை இருக்கும் .
பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர, பா.ஜ.க தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் RSSஸின் பல தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதம மந்திரியின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் சாகேத் மகாவித்யாலயத்திலிருந்து ராம் ஜன்மபூமி தளம் வரையிலான பகுதி ஏற்கனவே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, ராம்கோட் வட்டாரத்தில் வசிப்பவர்களுக்கு பயணத்திற்கான பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமான பாதுகாப்பு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் வீடு வீடாக சோதனை செய்யப்படுகிறது.
அயோத்தியில் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைத்து கூரை உச்சிகளிலும் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள், ட்ரோன் கேமராக்கள் இந்த பகுதியில் நடமாட்டத்தை கண்காணிக்கும்.