Kathir News
Begin typing your search above and press return to search.

இடைத்தரகர் இல்லாமல் பொதுமக்கள் வங்கி கடன் பெற உதவி செய்வதற்காக தமிழக பா.ஜ.க சார்பில் இணையதளம்!

இடைத்தரகர் இல்லாமல் பொதுமக்கள் வங்கி கடன் பெற உதவி செய்வதற்காக தமிழக பா.ஜ.க சார்பில் இணையதளம்!

இடைத்தரகர் இல்லாமல் பொதுமக்கள் வங்கி கடன் பெற உதவி செய்வதற்காக தமிழக பா.ஜ.க சார்பில் இணையதளம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jun 2020 4:40 AM GMT

இடைத்தரகர் இல்லாமல் பொதுமக்கள் வங்கி கடன் பெற உதவி செய்வதற்காக தமிழக பா.ஜ.க சார்பில் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தொழில் துவங்க வீடு கட்ட கல்வி கற்க என அனைத்திற்கும் வங்கி கடன் வழங்க உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற முடியாமல் தவிப்போருக்கு உதவுவதற்காக தமிழக பா.ஜ.க.வில் 'வங்கிக் கடன் கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார். மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இக்கமிட்டி சார்பில் வங்கி கடன் பெறுவோருக்கு உதவி செய்வதற்காக 'வங்கி கடன் உதவும் தாமரை திட்டம்' என்ற பெயரில் www.tnbjp.in என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.





இத்திட்டம் குறித்து இணையதளத்தில் பதிவிடப்பட்ட தகவலில், "வங்கி கடன் உதவும் "தாமரை" என்ற ஒரு அமைப்பை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் அவர்களின் தலைமையில் உருவாக்கியுள்ளது. இதில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் போடப்பட்டுள்ளது. இதன் நோக்கம் மத்திய அரசு அறிவித்துள்ள இந்த பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் எப்படி கடன் பெறுவது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை உங்களுக்கு உதவி எடுத்துக்கூறி வழி நடத்துவதாகும்.

வங்கியில் கடன் வாங்க விரும்புவோர் அதற்கான வழி காட்டுதல் வேண்டும் என்றால் இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள். செய்தபின் Login செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும். எங்கள் நிர்வாகி உங்களை தொடர்புகொண்டு உதவுவார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News