முன்னாள் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் அவர்களை கிண்டல் செய்து பதிவிட்ட புதிய தலைமுறை செய்தியாளர்.! #beelarajesh #puthiyathalaimurai
முன்னாள் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் அவர்களை கிண்டல் செய்து பதிவிட்ட புதிய தலைமுறை செய்தியாளர்.! #beelarajesh #puthiyathalaimurai
By : Kathir Webdesk
முன்னாள் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் அவர்களை இப்போது தமிழக அரசு தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனோ தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை ட்விட்டரில் விஜி என்பவர் பகிர்ந்தார் அதற்க்கு புதிய தலைமுறையில் பணியாற்றி வரும் ரமேஷ்முருகேசன் என்பவர் அதனை விமர்சிக்கும் விதமாக "கிருஷ்ணகிரிக்கு என்று ஒரு பழமொழி சொல்வார்கள்" என கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார், இது பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது.
ஒரு தனியார் சேனலில் பணியாற்றி வருபவர், தன்னை அந்த தனியார் சேனலில் பணியாற்றி வரும் நபராக அடையாளபடுத்த விரும்புபவர் ஒரு அரசு அதிகாரியை அதுவும் பெண்ணை இவ்வாறு தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை புதிய தலைமுறை ஊக்குவிக்றதா என்றும் தெரியவில்லை?
அரசியல் காழ்ப்புணர்ச்சி'யால் எத்தனையோ தனியார் சேனலை சேர்ந்த ஆட்கள் பதிவிட்டிருந்தாலும் புதிய தலைமுறையின் ரமேஷ்முருகேசனின் இந்த செயல் புதியதலைமுறையின் வன்ம உணர்வா இல்லை ரமேஷ்முருகேசன் என்ற தனிநபரின் கீழ்த்தரமான எண்ணமா என அவர்கள்தான் விளக்க வேண்டும்.