Begin typing your search above and press return to search.
பா.ஜ.க சார்பில் ஒரு மாதத்திற்கு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதில்லை - தேசிய தலைவர் நட்டா
பா.ஜ.க சார்பில் ஒரு மாதத்திற்கு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதில்லை - தேசிய தலைவர் நட்டா

By :
சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒரு மாதத்திற்கு போராட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்துவதில்லை என பா.ஜ.க முடிவு செய்துள்ளது. இத்தகவலை பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
Next Story