Begin typing your search above and press return to search.
அடுத்த பா.ஜ.க ஆட்சியில் தமிழகத்தின் குரல் வலுவாக ஒலிக்கும்: பா.ஜ.க தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நம்பிக்கை
அடுத்த பா.ஜ.க ஆட்சியில் தமிழகத்தின் குரல் வலுவாக ஒலிக்கும்: பா.ஜ.க தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நம்பிக்கை
By : Kathir Webdesk
நேற்று மாலை தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தாம் வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளதாக கூறிய அவர், மக்கள் நலனுக்கு உகந்த கூட்டணி அமைக்கப்படும் என்றார். மத்தியில் அடுத்து அமையும் ஆட்சியில் தமிழகத்தின் குரல் வலுவாக ஒலிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் தரும் வகையிலும் பா.ஜ.க. நடவடிக்கை எடுக்குமென பியூஷ் கோயல் தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுகவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருக்கலாம் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
Next Story