Begin typing your search above and press return to search.
முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
By :
நேற்று இரவு 7 மணிக்கு சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசியில் பேசியுள்ளார். அதில் அவருடைய பெயர் பாட்ஷா எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் வெடிகுண்டு வெடிக்க போகிறது எனவும் பேசிவிட்டு தொலைபேசியை வைத்துள்ளார்.
இதனை பற்றி தகவல் அறிந்த உடன் காவல்துறையினர் விரைந்து சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சோதனை செய்யும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை மற்றும் தொலைபேசியில் பேசிய அந்த மர்ம நபர் யார் என்று காவல்துறை விசாரித்து வருகிறார்கள்.
Next Story