Kathir News
Begin typing your search above and press return to search.

சுவரில் வேல் வரைந்து எதிர்ப்பைப் பதிவு செய்த குழந்தைகள் - கறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.!

சுவரில் வேல் வரைந்து எதிர்ப்பைப் பதிவு செய்த குழந்தைகள் - கறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.!

சுவரில் வேல் வரைந்து எதிர்ப்பைப் பதிவு செய்த குழந்தைகள் - கறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2020 8:00 AM GMT

கந்த சஷ்டி‌ கவசத்தையும் இந்து மத நூல்கள் மற்றும் புராணங்களையும் இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும்‌ எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த யூட்யூப் சேனலுக்கு எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பா.ஜ.கவினர் மற்றும் பல்வேறு தரப்பினர் காவல்துறையில் புகார்களைப் பதிவு செய்ததால் கறுப்பர் கூட்டம் சேனலுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் அவர்களில் ஒருவர் கடந்த காலத்தில் தி.மு.க ஐடி விங்கில் பணியாற்றியவர்‌ என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு இந்து அமைப்புகளும் பிரபலங்களும் கந்த சஷ்டி கவசத்தை பாடியும் பிற முறைகளிலும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூட கந்த சஷ்டி கவசத்தைப் பாடும் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.


image courtesy : Dinamalar

இந்த வரிசையில் கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் குழந்தைகள் சாலையோர சுவர்களில் முருகனின் ஆயுதமான வேலை வரைந்து நூதன முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பலரும் கந்த சஷ்டி கவசத்தைப் பாடியும் வாசித்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் குழந்தைகளின்‌ இந்த புது விதமான போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கந்த சஷ்டி கவசத்தைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாக யாராவது பேசினால் வீதியில் இறங்கி போராடுவோம் என்று இந்த குழந்தைகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News