கேரளாவில் கற்பழிப்பு பிஷபுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கபட்ட கொடுமை!
கேரளாவில் கற்பழிப்பு பிஷபுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கபட்ட கொடுமை!
By : Kathir Webdesk
கேரள மாநிலம் கோட்டயம் கன்னியாஸ்திரி இல்லத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பிஷப் பிராங்கோ மூலக்கல் தன்னை கற்பழித்ததாக புகார் அளித்தார். இவர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பிஷப்பாக அப்போது இருந்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பலமுறை தன்னை அவர் கற்பழித்துள்ளார் என்று அந்த கன்னியாஸ்திரி தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு சம்பிரதாயத்துக்கு விசாரித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த கன்னியாஸ்திரிகள் சிலர், கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். பிராங்கோ மூலக்கல்லை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு, கேரளாவின் கோட்டயம் மாவட்டம் பாலாவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் கற்பழிப்பு பிஷப் பிராங்கோ எதிராக போராடிய கன்னியாஸ்திரி லூஸி கலாப்புராவுக்கு கடந்த 5-ஆம் தேதி, பிரான்ஸிஸ்கன் க்ளாரிஸ்ட் சர்ச் நிர்வாகத்தில் இருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தக் கடிதம் மூலம் நீங்கள் பிரான்ஸிஸ்கன் க்ளாரிஸ்ட் சபையிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறீர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பலமுறை உங்களின் நடவடிக்கைகளை கண்டித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறோம்.
ஆனால், நீங்கள் ஒருமுறைகூட அதற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை. குறைந்தபட்சம் சரியான விளக்கம்கூட அளிக்கவில்லை.
உங்கள் வாழ்க்கை முறையானது பிரான்ஸிஸ்கன் க்ளாரிஸ்ட் சபையின் விதிமுறைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. சபையைவிட்டு நீங்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கற்பழித்த பிஷப் பிராங்கோ மூலக்கல் மீது நடவடிக்கை எடுத்து கன்னியாஸ்திரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறித்திய கன்னியாஸ்திரியை சபையில் இருந்த நீக்கி உள்ளது மற்ற கன்னியாஸ்திரிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கிறிஸ்தவ சர்ச் நிர்வாகம் மீது கொந்தளிப்பில் உள்ளனர்.