Begin typing your search above and press return to search.
பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இனி வாய்ப்பில்லை: அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கம் தடை !
பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இனி வாய்ப்பில்லை: அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கம் தடை !
By : Kathir Webdesk
பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்திய திரைப்படங்களில் இனி வாய்ப்பளிக்கக் கூடாது என அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. புல்வாமா சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சங்கம் இந்த தடையை விதித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான தீவிரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கமும் இணைந்து நிற்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது எந்த திரைப்பட நிறுவனமாவது பாகிஸ்தான் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருந்தால் அவர்களை வெளியேற்றுமாறும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story