Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய பயிர்களை அழிக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள்.!

மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய பயிர்களை அழிக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள்.!

மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய பயிர்களை அழிக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Jun 2020 11:47 AM GMT

மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள விவசாய பயிர்களை பாலைவன வெட்டுக்கிளிகள் அழித்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதற்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. இது விவசாய வயல்கள் மட்டுமல்லாமல் பச்சையான மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது. இந்த வெட்டிகிளி களால் தங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது என வேதனையுடன் மக்கள் தெரிவித்து இருந்தனர்.

தற்போது மீண்டும் இந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெயப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஹஸ்டேடா கிராமத்தில் உள்ள விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்த கூட்டம் நான்காவது முறையாக விவசாய பயிர்களை அழித்து வருகிறது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதற்காக ராஜஸ்தான் மாநில அரசு எங்களுக்கு நிவாரண நிதி கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News