இலங்கையில் விடுதலைப்புலிகள் செயல்படுவதாக இலங்கை அரசு பொய் பிரச்சாரம்.!
இலங்கையில் விடுதலைப்புலிகள் செயல்படுவதாக இலங்கை அரசு பொய் பிரச்சாரம்.!
By : Kathir Webdesk
வடக்கில் உள்ள பல புத்தர் சிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் யாழில் உள்ள நாக விகார் மீது சமீபத்தில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதனை அடுத்து 400 முன் நாள் போராளிகளை கண்காணிக்குமாறு, இலங்கை அரசு புலனாய்வு துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதகா கொழும்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. குறித்த 400 போராளிகளும் புணர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுதலையாகியுள்ள நிலையில்.அவர்கள் கண்காணிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை அரசு தரப்பே இவ்வாறு ஒரு சிலரை வைத்து புத்த சிலைகளை உடைக்கச் சொல்வதும். பின்னர் அதனை காரணம் காட்டி யாழில், பாதுகாப்பை உயர்த்துவதுமாக உள்ளது.
இது விடுதலைப் புலிகள் இன்னும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள், என்று உலகிற்கு பொய்யான தகவலை பரப்புவதே இலங்கை அரசின் நோக்கமாக அமைந்துள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு வேகமாக செயல்பட்ட காலகட்டத்தில் கூட புத்த வழிபாட்டு தளங்களை தாக்கியது கிடையாது என்கின்றனர். ஆனால் தமிழர்கள் தங்களின் உயிரின் மேலாக கருதும் இந்து முருகன் கோயில் சிவன் கோயிலை சிங்களர்கள் உடைத்த வரலாறு மட்டுமே உள்ளது