Begin typing your search above and press return to search.
கொரோனாவை அழிக்கும் தடுப்பூசியின் நிலைமை இறுதிக் கட்டத்தில் உள்ளது என மெடர்னா நிறுவனம் தகவல்.!
கொரோனாவை அழிக்கும் தடுப்பூசியின் நிலைமை இறுதிக் கட்டத்தில் உள்ளது என மெடர்னா நிறுவனம் தகவல்.!
By : Kathir Webdesk
அமெரிக்காவின் மெடர்னா (Moderna) பயோடெக் நிறுவனம் கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி மருந்தை ஆராய்ச்சி நடத்திவந்தது. தற்போது இந்த தடுப்பூசியின் நிலைமை இறுதிக் கட்டத்தில் உள்ளதாக மெடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 30,000 பேருக்கு இந்த தடுப்பூசி மருந்தை பரிசோதனை நடத்த உள்ளதாகவும் நிறுவனம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்சில் இருக்கும் மெடர்னா நிறுவனம் தங்களுடைய தடுப்பூசி ஆய்வை முதலில் அறிகுறியுடன் வருபவர்களுக்கு இதை கொண்டு தடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
இரண்டாம் கட்டமாக, மக்கள் மருத்துவமனைக்கு வருவதை தடுக்கவும் மற்றும் கொரோனாவை அழிக்கும் தடுப்பூசியை தயாரிக்கப்படும் என்றும் மெடர்னா நிறுவனம் நம்பிக்கையோடு உள்ளது.
Next Story