சம்பளம் வாங்காமல் ஒரு திரைப்படத்தில் நடிக்க முடியுமா இதற்கு எடுத்துக்காட்டாக பாரதிராஜா உள்பட ஒட்டுமொத்த யூனிட்டும் நடிக்கிறது - அப்படி என்ன படம்..?
சம்பளம் வாங்காமல் ஒரு திரைப்படத்தில் நடிக்க முடியுமா இதற்கு எடுத்துக்காட்டாக பாரதிராஜா உள்பட ஒட்டுமொத்த யூனிட்டும் நடிக்கிறது - அப்படி என்ன படம்..?
By : Kathir Webdesk
கடந்த ஆண்டு விளையாட்டை மையமாக வைத்து படங்களை இயக்கிய சுசீந்திரன் தற்போது இவர் கொரோனாவை மையமாக வைத்து கதை தயாரித்திருக்கிறார். இந்த கதைக்கு பாரதிராஜா உட்பட ஒட்டுமொத்த சினிமா யூனிட்டும் சம்பளம் வாங்காமல் நடிக்கின்றனர். இது கிராமத்து "திரில்லர்" படமாகும். இந்த படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. எப்பொழுது படம் எடுக்கலாம் என்று அறிவிப்பு வரும் என்று படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.அறிவிப்பு வந்தவுடன் படத்தை எடுக்க ஆரம்பிக்க உள்ளனர்.
இந்தப் படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கிறார். மேலும் படத்தில் பல முக்கிய நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் சுசீந்திரன் அவருடைய சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்திலும்,அதைச் சுற்றியுள்ள தேனி மாவட்டத்திலும் முழு படப்பிடிப்பையும் அங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். கதை கொரோனா ஒரு ஊரையே எவ்வாறு வேதனைப் படுத்துகிறது என்றும் அங்கு நடக்கும் திகிலூட்டும் சம்பவங்களை எடுப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பாரதிராஜா உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளம் கிடையாது என்றும் படத்தை எடுத்து முடித்து வியாபாரத்தில் பங்கு உண்டு என்று தெரிவித்திருக்கின்றனர்.