அயோத்தி : பூமி பூஜையில் ராமர் மற்றும் இராமாயணத் தபால் தலைகளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி.!
அயோத்தி : பூமி பூஜையில் ராமர் மற்றும் இராமாயணத் தபால் தலைகளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி.!
By : Kathir Webdesk
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலில் ஆகஸ்ட் 5ம் தேதி நடத்தப்படும் பூமி பூஜையில் கலந்துகொள்ளவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு தபால் தலைகளை வெளியிடப்போவதாகக் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ராமர் கோயிலின் சின்னமும் மற்ற ஒன்று இராமாயணத்தின் மீதும் இருக்கும் எனக் கூறப்படுகின்றது.
திட்டமிட்டபடி அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றால் பூமி பூஜையில் தபால் தலைகள் வெளியிடப்படும் என்று அயோத்தியா ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் Y P சிங்க் தெரிவித்துள்ளதாக ,இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும் அவர் "அந்த தபால் தலைகளில் ஒன்று ராமர் கோவிலின் சின்னமும் மற்ற ஒன்று மற்ற நாடுகளில் ராமரின் முக்கியத்துவத்தை சித்தரிப்பது போன்றிருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
பூமி பூஜையில் உத்தர பிரதேஷ் முதல்வர் யோகி ஆதித்யநாத், மூத்த பா.ஜ.க தலைவர்கள் L K அத்வானி, M M ஜோஷி, உமா பாரதி மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட மற்ற மதத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
பூமி பூஜையில் பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்ற மத்திய உளவுத் துறை அறிவுறுத்தலின் படி அனைத்து தீவிரப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அயோத்தியில் செய்யப்பட்டுள்ளன.
மாநில அரசுடன் பகிரப்பட்ட இன்டெல் தகவலின் படி பாகிஸ்தானிய ISI தீவிரவாதிகள் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்குதல் நடத்தவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ISI லஸ்கர் -இ -தைபா மற்றும் ஜெய்சி -ஐ -மொஹம்மத் தலைவர்களிடம் தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
Source: https://indianexpress.com/article/india/on-august-5-pm-modi-likely-to-launch-postal-stamps-on-ram-temple-ramayana-6529967/