Begin typing your search above and press return to search.
புதுச்சேரி : உயிரிழந்த மயில் - தேசிய கொடி போர்த்தி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்.!
புதுச்சேரி : உயிரிழந்த மயில் - தேசிய கொடி போர்த்தி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்.!
By : Kathir Webdesk
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டம் திருவள்ளுவர் நகரில் வசிக்கும் ஐகபர் என்பவரது வீட்டின் முன் திடிரென்று ஏதோ சத்தம் வருவதை தொடர்ந்து வெளியில் வந்து பார்த்த போது அங்கு தேசிய பறவையான மயில் ஒன்று மின் கம்பத்தின் கீழ் அடிப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உடனடியாக காவல்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே அடிப்பட்டு உயிருக்கு போராடிய மயில் சிறிது நேரத்திலோ உயிர் இழந்தததை தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மயில் மீது தேசிய கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து வனத்துறையினரிடம் உயிரிழந்த மயிலை ஒப்படைத்தனர்.
Next Story