Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : துணைநிலை ஆளுநருக்கு கொரோனா தொற்று இல்லை-சுகாதாரத்துறை அறிவிப்பு.!

புதுச்சேரி : துணைநிலை ஆளுநருக்கு கொரோனா தொற்று இல்லை-சுகாதாரத்துறை அறிவிப்பு.!

புதுச்சேரி : துணைநிலை ஆளுநருக்கு கொரோனா தொற்று இல்லை-சுகாதாரத்துறை அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 July 2020 8:11 AM GMT

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆளுநர் அலுவலகம் 48 மணிநேரத்திற்கு மூடப்பட்டது. தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த பலரும் தனிமைப்படுத்தப்பட்டனர். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனை நடத்தப்பட்டது.


இந்த பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானது. இதில் கிரண்பேடி மற்றும் அதிகாரிகளுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது. இதுகுறித்து ராஜ்நிவாஸ் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


ஆளுநர் மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட அலுவலக ஊழியர்கள், அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையிலும் யாருக்கும் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநர் மாளிகை முழுவதும் இரண்டாவது நாளாக இன்றும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் இரண்டாவது நாளாக ஆளுநர் அலுவலகம் மூடப்பட்டதால் ஊழியர்கள் உள்ளிட்ட யாரும் மாளிகைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News