Kathir News
Begin typing your search above and press return to search.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் குரல் முன்பு இருந்த கம்பீர குரலாக மாறியது - அக்குபஞ்சர் மருத்துவர் தகவல்.!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் குரல் முன்பு இருந்த கம்பீர குரலாக மாறியது - அக்குபஞ்சர் மருத்துவர் தகவல்.!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் குரல் முன்பு இருந்த கம்பீர குரலாக மாறியது - அக்குபஞ்சர் மருத்துவர் தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 July 2020 7:18 AM GMT

நடிகரும் தேமுதிக அரசியல் கட்சித் தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை பற்றி அவருடைய அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.


அந்த பேட்டியில் மருத்துவர் கூறியது: தற்போது விஜயகாந்த் நலமாக உள்ளார். அவருடைய உடல்நிலை நல்ல முன்னேற்றத்தை பெற்று வருகிறது. பின்பு பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் மற்றும் நண்பர்களை பற்றி என்னிடம் பகிர்ந்துகொண்டார். அதேபோல் மீண்டும் நண்பர்களோடு இணைந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

விஜயகாந்துக்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய் இருப்பதை ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டனர் என மருத்துவர் தெரிவித்தார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்பட நாடுகளுக்கு சென்று மருத்துவம் பெற்று வந்த அவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையை குணம் படுத்தமுடியவில்லை. தற்போது அக்குபஞ்சர் முறையில் அந்த பிரச்சனையை குணமப்படுத்தி வருவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சென்ற 20 நாட்களாக அக்குபஞ்சர் முறையில் அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. பின்னர் இன்னும் 60 நாட்கள் சிகிச்சை உள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் நல்ல முன்னேற்றத்தைகாண்போம் என நம்புகிறேன். அதே சமயத்தில் அவருடைய உடல்நிலையில் உள்ள 45% பிரச்சினைகளில் இருந்து குணம் அடைந்து விட்டார் என மருத்துவர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் நல்ல கம்பிரமாக உள்ளார். அவருடைய குரல் முன்பு இருந்தது போல் கம்பீரமாக மாறிவிட்டது.

கொரோனா வைரஸில் இருந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி வருகிறார். மேலும் விஜயகாந்துக்கு அக்குபஞ்சர் மருத்துவ முறை தான் முழுமையாக கொடுக்கப்பட்டு வருகிறது மற்றும் முழுமையாக குணம் அடைவர் என மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News