மாடு வாங்க பணம் இல்லாததால் தன் சொந்த மகளையே மாடு போல் கட்டி ஏர் விழுத விவசாயி - உதவி செய்த சோனு சூட்.!
மாடு வாங்க பணம் இல்லாததால் தன் சொந்த மகளையே மாடு போல் கட்டி ஏர் விழுத விவசாயி - உதவி செய்த சோனு சூட்.!
By : Kathir Webdesk
இந்த கொரோனா காலங்களில் மக்களுக்கு அதிக உதவிகள் செய்து வரும் நடிகர் சோனு சூட். முன்புகூட இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தன் சொந்த செலவில் அவர்களுக்கு உதவி செய்து வந்தார். மேலும் படிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கும் மாணவ,மாணவிகளை அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு செய்து அவர்களுக்கு உதவி செய்தார் மேலும் இவர் செய்த நிறைய உதவிகள் இருக்கின்றன.
மேலும் தற்போது இருக்கும் சூழ்நிலையில் கொரோனா காரணமாக விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதனை அடுத்து தற்போது, ஆந்திர மாநிலத்தில் ஒரு விவசாயி மாடுகள் வாங்க பணம் இல்லாததால் தன் சொந்த மகளை வைத்து ஏரில் பூட்டி விவசாயம் செய்யத் தொடங்கியிருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியது.
இந்த வீடியோவை பார்த்த சோனு சூட் அவர்களுக்கு மாடு வாங்கி தருவதாக கூறியிருந்தார் ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு டிராக்டரையே பரிசாக கொடுத்திருக்கிறார். இவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.