மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும் - கந்த சஷ்டி அவதூறுக்கு கொந்தளித்த ரஜினிகாந்த்!
மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும் - கந்த சஷ்டி அவதூறுக்கு கொந்தளித்த ரஜினிகாந்த்!
By : Kathir Webdesk
கந்த சஷ்டி கவசம் பாடலை அவதூறு செய்த திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க கட்சிகளின் கைக்கூலியான கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் முடக்கப்பட்டதுடன், அது தொடர்பான சுரேந்தர் நடராஜன் மற்றும் பலர் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணி வருகின்றனர்.
இது தமிழ்கம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவரது தற்போதைய பதிவில் கூறியிருப்பதாவது "கந்த சஷ்டி கவசத்தை மிகக்கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடுயாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!"
என்று கூறியுள்ளார்.
#கந்தனுக்கு_அரோகரா pic.twitter.com/zWfRVpufXk
— Rajinikanth (@rajinikanth) July 22, 2020
ரஜினிகாந்தின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.