Kathir News
Begin typing your search above and press return to search.

இலவச எரிவாயு வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல் விபரம்.!

இலவச எரிவாயு வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல் விபரம்.!

இலவச எரிவாயு வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல் விபரம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 July 2020 1:25 PM GMT

இலவச எரிவாயு வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஊழியர்கள், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 24% தொகையை அரசே செலுத்தும் திட்டம் அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக 1.49 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு

ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் ( 2019-20-ல் வழங்கிய ரூ.2,500 கோடி உட்பட) ஆகிய 3 பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களுக்கும் ரூ.12,450 கோடி மூலதன நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

ஏழைகளுக்கு தொடர்ந்து உதவுவதற்காக, பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தை நவம்பர் மாதம் வரை ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நகர்ப்புற புலம் பெயர் தொழிலாளர்கள்/ஏழைகளுக்கு பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் துணை திட்டமாக, மலிவான வாடகை குடியிருப்புகளை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News