வீட்டில் தனிமை படுத்தப் பட்டிருந்த ஐஸ்வர்யாராய் அவரது குழந்தையுடன் மருத்துவமனையில் அனுமதி.!
வீட்டில் தனிமை படுத்தப் பட்டிருந்த ஐஸ்வர்யாராய் அவரது குழந்தையுடன் மருத்துவமனையில் அனுமதி.!
By : Kathir Webdesk
கொரோனா தொற்று உறுதியான சில நாள்களுக்கு பின்னர் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், மகள் ஆராத்யா பச்சனுடன் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலிவுட் நடிகா் அமிதாப்பச்சனுக்கு கொரோனா பாதிப்பு கடந்த வாரம் சனிக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது. அவரையடுத்து அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வா்யா பச்சன், பேத்தி ஆராத்யா பச்சன் ஆகிய மூன்று பேருக்கும் ஜூலை 12 -ஆம் தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமிதாப் பச்சன,அபிஷேக் பச்சனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஐஸ்வர்யா ராயும் அவரது மகளும் வீட்டில் தனிமை பட்டிருந்த நிலையில் தற்போது சிகிச்சைக்காக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் தேவைக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும் அறிவுரை கூறியிருக்கிறார். இதையடுத்து அவர் ரசிகர்களுக்கு கூறியிருப்பது நான் விரைவில் நலமாக வருவேன் என்று அறிவித்திருக்கிறார்.