Begin typing your search above and press return to search.
புதிய ரேபிட் டெஸ்ட் உபகரணங்களை பரிசோதனை செய்ய இஸ்ரேல் குழு இந்தியா வருகை.!
புதிய ரேபிட் டெஸ்ட் உபகரணங்களை பரிசோதனை செய்ய இஸ்ரேல் குழு இந்தியா வருகை.!
By : Kathir Webdesk
கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகமாக செய்வதற்கு தயாரிக்கப்பட்டுள்ள ரேபிட் டெஸ்ட் கிட்களை பரிசோதனை செய்வதற்கு இஸ்ரேல் குழு இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் இந்திய மருத்துவ வல்லுநர்கள் ஒன்றிணைந்து கொரோனா வைரஸை விரைவில் கண்டுபிடிக்கும் புதிய டெஸ்ட் உபகரணங்களை உருவாக்கியுள்ளனர். இதில் முதல்கட்ட பரிசோதனையை இஸ்ரோலில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
தற்போது அந்த உபகரணங்களை பரிசோதனை செய்வதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சித் துறையின் மூத்த அதிகாரிகளின் குழு டெல்லி வந்துள்ளனர்.
இஸ்ரேல் குழு இந்தியா பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உபகரணங்கள் மூலம் பரிசோதனை செய்ய உள்ளனர்.
Next Story