Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : கந்தசஷ்டி கவச புத்தகம் மற்றும் முக கவசங்களை வழங்கிய பா.ஜ.க. வினர்.!

புதுச்சேரி : கந்தசஷ்டி கவச புத்தகம் மற்றும் முக கவசங்களை வழங்கிய பா.ஜ.க. வினர்.!

புதுச்சேரி : கந்தசஷ்டி கவச புத்தகம் மற்றும் முக கவசங்களை வழங்கிய பா.ஜ.க. வினர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2020 4:04 AM GMT

உலக மக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டியும், சஷ்டி விரதத்தை முன்னிட்டு புதுச்சேரியில் வீடுதோறும் கந்தன் அருள் பெற "கந்த சஷ்டி கவசம்" புத்தகம் மற்றும் "முக கவசம்" வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர் மகேஷ் ரெட்டி தலைமையில் உருளையன்பேட்டை தொகுதி முருகன் கோவிலில் தொடங்கியது.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கான சிறப்பு விருந்தினர்கள் நகரம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அசோக் பாபு, உப்பளம் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர் கோபி என்கிற சிவராஜ், உருளையன்பேட்டை தொகுதி தலைவர் தனசேகர், தொகுதி பொதுச்செயலாளர் , மணி பாரதி சக்திவேல் ராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு வா உ சி விதி பகுதிகளில் 100 குடும்பங்களுக்கு கந்தசஷ்டிகவசம் புத்தகம் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. கந்தசஷ்டி கவச புத்தகம் மற்றும் முகக்கவசங்களை பெற்றுக்கொண்ட மக்கள் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News