Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கடைபிடிப்பு.!

புதுச்சேரி : பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கடைபிடிப்பு.!

புதுச்சேரி : பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கடைபிடிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 July 2020 4:02 AM GMT

கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர்.


இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் புதுச்சேரியில் அனுசரிக்கப்பட்டது.


கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரெஞ்ச் துணை தூதர் காத்ரின் ஸ்வாட், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் ஆருண் ஆகியோர் மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தினர். கொரோனா காரணமாக ஓய்வு பெற்ற பிரெஞ்சு ராணுவ வீரர்கள், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், யாரும் பங்கேற்கவில்லை ஒரு சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் இந்தியா, பிரான்ஸ் தேசிய கீதங்கள் ஒளிபரப்பப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News