நடிகை "ஓவியா" பிக்பாஸ் பற்றி அதிரடியான ட்விட்.!
நடிகை "ஓவியா" பிக்பாஸ் பற்றி அதிரடியான ட்விட்.!
By : Kathir Webdesk
பிக்பாஸ் சீசன் 1-ல் பங்கேற்று அதிகப்படியான மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சி விஜய் டிவி எனும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் இந்த பிக்பாஸ்
நிகழ்ச்சி டிஆர்பி எகிறியது.
கொரோனா காரணத்தால் தற்போது தொடங்கவிருக்கும் பிக்பாஸ் சீசன்-4 தொடங்காமல் இருக்கிறது.
தற்போது ஓவியா கொடுத்த சர்ச்சை ட்விட்: நேற்றிரவு திடீரென்று "பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் ஓவியா.
அதனைப் பார்த்த ரசிகர்கள் "ஆம்" தடை செய்ய வேண்டும் என்று ஒருவர் பதிலளித்தார்.
அவருக்குப் பதிலளிக்கும் விதமாக ஓவியா அவர்கள் போட்டியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வரை டிஆர்பிக்காக அவர்களைச் சித்ரவதை செய்யாமல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ட்விட்டை சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பரவி வருகின்றன. இவர் இப்படி கூறுவதில் அனைவரின் மத்தியிலும் இந்த நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் ஆக இருக்க இருக்கலாம் என்று எண்ணம் எழுந்துள்ளது.