திமுக பலவீனபடுகிறபோது எல்லாம் இந்து மத கடவுள்களை கொச்சை படுத்தி பேசி மக்கள் வாக்கை பெற நினைக்கிறது : பொன்.ராதாகிருஷ்ணன் .!
திமுக பலவீனபடுகிறபோது எல்லாம் இந்து மத கடவுள்களை கொச்சை படுத்தி பேசி மக்கள் வாக்கை பெற நினைக்கிறது : பொன்.ராதாகிருஷ்ணன் .!
By : Kathir Webdesk
திமுக பலவீனபடுகிறபோது எல்லாம் இந்து மத கடவுள்களை கொச்சை படுத்தி பேசி மக்கள் வாக்கை பெற நினைக்கிறது : பொன்.ராதாகிருஷ்ணன்
யு.டியூப் சேனலில் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இனை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக எப்போது எல்லாம் பலவீனபடுகிறதோ? அப்போது எல்லாம் இந்து மத கடவுள்களை கொச்சை படுத்தி பேசி மக்கள் வாக்குகளை பெற நினைப்பது வழக்கம்.
அந்தவகையில் தமிழகத்தில் 1967 ம் ஆண்டு திமுக ஆட்சியை பிடிக்க எப்படி மத மோதலை உருவக்கினார்களோ அதே போன்று வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்க மீண்டும் திமுக அதே தந்திரத்தை செய்து வருகின்றனர். என பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்