Kathir News
Begin typing your search above and press return to search.

குற்றவாளிகளுடன் என்னை தொடர்புபடுத்துவதா?நடிகை பூர்ணா வருத்தம்.!

குற்றவாளிகளுடன் என்னை தொடர்புபடுத்துவதா?நடிகை பூர்ணா வருத்தம்.!

குற்றவாளிகளுடன்  என்னை  தொடர்புபடுத்துவதா?நடிகை பூர்ணா வருத்தம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 July 2020 5:11 AM GMT

நடிகை பூர்ணா சில தினங்களுக்கு முன்பு ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை அன்வர் அலி என்று அறிமுகப்படுத்தியது. நகைக்கடை ஒன்று துபாயில் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் குடும்பத்தினர் பூர்ணாவை திருமணம் செய்து வைக்கும்படி நேரில் சென்று பெண் கேட்டு உள்ளனர்.

அவர் மோசடி கும்பல் என்று தெரியவந்ததும் பூர்ணா காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் கைது செய்தனர். இந்த மோசடிக் கும்பல் சினிமா பிரபலங்கள் மூலம் தங்க கடத்தலில் ஈடுபட்டு உள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

திருமண மோசடி கும்பல் கைதான விவகாரத்தில் உண்மைக்கு மாறாக தகவல்கள் வெளியாகின்றன கும்பலின் முக்கிய குற்றவாளி எனக்கு தெரியாது. என்னை தொடர்புபடுத்தி பேசவேண்டாம். அவர்கள் போலியான முகவரிகள் மூலம் திருமணம் பற்றி பேசினார்.

மோசடி தனம் தெரிந்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தோம். நாங்க சட்டரீதியாக இறங்கியதும் எங்களை மிரட்டினர். கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். எனது குடும்பத்தினர் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம் இவ்வாறு கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News