Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்புக்கட்டுரை : முதல் தென்னிந்திய பிரதமர் நரசிம்ம ராவை இறப்பிலும் அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சி!

சிறப்புக்கட்டுரை : முதல் தென்னிந்திய பிரதமர் நரசிம்ம ராவை இறப்பிலும் அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சி!

சிறப்புக்கட்டுரை : முதல் தென்னிந்திய பிரதமர் நரசிம்ம ராவை இறப்பிலும் அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2020 4:14 AM GMT

'காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த சிறந்த பிரதமர்' என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் P.V .நரசிம்ம ராவ், தென்னிந்தியாவை சேர்ந்த முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி எனப் பல பட்டங்களுக்கு சொந்தக்காரர்.

ஆனால் நேரு குடும்பத்தில் இருந்து வராத பிரதமர் என்ற காரணத்தினால் அவரை சோனியா காந்தியும், அவர் குடும்பமும் சிறிதும் மதிக்கவில்லை. எந்தளவு மதிக்கவில்லை என்றால் டெல்லியில் இருந்த AICC (அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி) வளாகத்திற்குள் அவர் இறந்த சடலத்தைக் கூட நுழைய விடாத அளவிற்கு கீழ்த்தரமாக நடந்து கொண்டனர்.

அவர் சடலம், வாசலுக்கு வெளியே வண்டியில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் கடைசி வரை கேட் திறக்கப்படவே இல்லை. முன்னாள் பிரதமர் ஆக அவர் இருந்த போதும், அவருக்கு அரசு இறுதிச் சடங்கும் இல்லை. ஒப்பீடு வைத்துப் பார்த்தால், ஆறு மாதம் மட்டுமே அமேதியின் எம்.பி யாக இருந்தவரும், அவசர நிலைக் காலத்தில் மக்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்தவருமான சஞ்சய் காந்திக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு கிடைத்தது மேலும் டெல்லியில் ஒரு சமாதியும் இருக்கிறது.

ராவ் 23 டிசம்பர், 2004 அன்று காலமானார். டிசம்பர் 27, 2004 அன்று, இந்திய கல்வியாளரும் கட்டுரையாளருமான நாலபத் இவ்வாறு எழுதினார்

"உண்மையில், முன்னாள் AICC தலைவராகவும், பிரதமராகவும் இருந்தபோதிலும், நேரு வம்சத்தின் தற்போதைய வாரிசு 1998 ல் கட்சியின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாளில் இருந்து, நரசிம்மராவ் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து மட்டும் விலக்கப்படவில்லை,ஏராளமான 'சிறப்பு அழைப்பாளர்களில்" ஒருவராக ஆவதற்கு கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. அவர்களில் பெரும்பாலோர் வேறு எந்த பங்களிப்பையும் விட அவர்களின் ஜால்ரா திறனுக்காக தேர்வு செய்யப்படுகிறார்கள்"

ராவ் மரணம் மற்றும் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸால் செய்யப்பட்ட அவமானம் குறித்து நாலபத் இவ்வாறு பேசுகிறார்.

"இருதயம் தொடர்பான பிரச்னைகளைத் தொடர்ந்து அதிகாலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட 13 நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 23 அன்று நண்பகலில், P V உயிரை விட்டுவிடுமாறு முடிவு செய்தார். மருத்துவர்கள் அந்த முடிவுக்கு வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகி இருந்தது.

வித்தியாசமாக - அல்லது ஒருவேளை முற்றிலும் எதிர்பார்க்கப்பட்டபடியே - அவரது இறுதிச் சடங்கு விஷயத்தை விவாதிப்பதற்காகவே மாலை 3 மணிக்கு ஒரு சிறப்பு மத்திய அமைச்சரவைக் கூட்டம் இருந்தபோதிலும், அவரது மோதிலால் நேரு மார்க் வீட்டில், உடலைப் பெற்று ஒரு மேடையில் வைக்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை, அல்லது பூக்கள், அல்லது துக்கம் கொண்ட மக்கள் உட்கார்ந்துகொள்வதற்காக நிர்வாகத்தால் தரைவிரிப்புகளை இடுவது, புல்வெளிகளில் ஒரு ஷாமியானா கூட இல்லை. இறுதியாக, நரசிம்ம ராவின் நண்பரான கிஷோர் இரண்டுக்கும் ஏற்பாடுகளைச் செய்தார். இரவு 8.15 மணிக்குத் தான் ஷாமியானா எழுப்ப முடிந்தது. தரைவிரிப்புகள் மற்றும் பூக்கள் கூட குடும்பத்தினரால் மற்றும் நண்பர்களால் வழங்கப்பட்டன,

இந்திய அரசு முற்றிலும் திவாலாகி விட்டது போல் ஒன்றுமே செய்ய வில்லை. அவரது உதவியற்ற தன்மைக்கு பரிகாரம் செய்வது போல, பிரதம மந்திரி சர்தார் மன்மோகன் சிங், மாலை 5 மணிக்கு சற்று முன்பு மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட உடலின் பக்கவாட்டில் அமைதியாக இருந்தார். அவர் வருத்தப்படுவது வெளிப்படையாகத் தெரிந்தது. உயர்ந்த கருணையின் அடையாளமாக, சோனியா காந்தி கூட அங்கே சில நிமிடங்கள் இருந்தார். அப்போது இருந்தவர்களில் சிலர் இதை பின்னர் மறுக்கக்கூடும் என்றாலும், உண்மை என்னவென்றால், குடும்ப உறுப்பினர்கள் - துக்கப்படுபவர்களின் கூட்டம் - பொருளாதார சீர்திருத்தத்தின் தந்தை, தெற்கிலிருந்து வந்த முதல் பிரதமருக்கு, சரண் சிங் ஏன் சஞ்சய் காந்திக்கு வழங்கப்பட்டது போல அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கும், டெல்லியில் ஒரு சமாதியும், நினைவுச் சின்னமும் கிடைத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ராவின்சடலம் ஹைதராபாத்திற்குச் செல்வதற்கு முன்னர் அவமானப்படுத்தப்பட்டது.

அடுத்த நாள், டிசம்பர் 24, முன்னாள் காங்கிரஸ் பிரதமரின் சடலம் 24, அக்பர் சாலையில் உள்ள AICC அலுவலகத்தின் வாயில்களுக்கு கொண்டு வரப்பட்டு, 'மரியாதை செலுத்துவதற்காக' என்று, 20 நிமிடங்கள் அங்கேயே வைக்கப்பட்டது, PVயின் சடலத்தை வண்டியில் இருந்து காங்கிரஸ் தலைமையகத்திற்கு உள்ளே கொண்டு செல்ல முடியாத அளவுக்கு உடல் மிகவும் கனமாக இருந்தது போலும். அந்த அடிப்படை நாகரிகம் கூட காங்கிரஸ்ஸிடம் இல்லை.

இந்த இறுதி அவமானத்திற்குப் பிறகு, PV நரசிம்மராவ் புதுடெல்லியில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டார், இந்த முறை ஒரேயடியாக."

அவர் இறந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2015 ல் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவிற்கு டெல்லியில் ஒரு நினைவுச்சின்னம் கிடைத்தது, அதுவும் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தால். இந்த வருடம் அவர் நூற்றாண்டுப் பிறந்த நாளை சந்திர சேகர ராவின் தலைமையிலான தெலங்கானா அரசாங்கம் கொண்டாடுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News