Kathir News
Begin typing your search above and press return to search.

முன்னணி இயக்குனர் தங்கர்பச்சான் கோபம் - என் பெயரில் போலியான செய்திகள் வெளியிடுகின்றனர் என குமுறல்.!

முன்னணி இயக்குனர் தங்கர்பச்சான் கோபம் - என் பெயரில் போலியான செய்திகள் வெளியிடுகின்றனர் என குமுறல்.!

முன்னணி இயக்குனர் தங்கர்பச்சான் கோபம் - என் பெயரில் போலியான செய்திகள் வெளியிடுகின்றனர் என குமுறல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 July 2020 10:28 AM GMT

இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான் அவ்வப்போது அரசியல்ரீதியான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சாத்தான்குளம் படுகொலை பற்றி ஒரு செய்தி வெளியானதை அடுத்து அந்த செய்தியை நான் வெளியிடவில்லை என்று மறுத்து உள்ளார். அதிலும் அவர் தனது புகைப்படங்களை பயன்படுத்தியும் தனது பெயரை பயன்படுத்தி போலி செய்திகள் பரவுகின்றன என்று அறிவித்திருக்கிறார்.இன்று கூட " சாத்தான் குளம் இரட்டைக் கொலை" குறித்த என் பெயரில் உலவும் செய்தி ஒன்றினை நண்பர் அனுப்பி வைத்திருந்தார்.

இன்றுவரையிலும் இக்கொலைகளை பற்றி நான் எந்த ஒரு அறிவிப்பும் சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு பதிவும் விடவில்லை என அறிவித்திருக்கிறார்.இப்படிப்பட்ட ஒரு செய்தியை வெளியிட்டவர் தண்டனைக்கு உள்ளாவார். இணைய கூலிகள் அதிகரித்துள்ள இவ்வேளையில் இதுபோன்ற செய்திகளை கண்டுகொள்ளாமல் இருப்பது எனக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறினார் என் பெயருக்கு களங்கம் ஏற்படும் என உணர்ந்தபடியால் இந்த இறுதி எச்சரிக்கையை விடுக்கிறேன்.

நான் பேசினாலும் எழுதினாலும் தனது வாட்ஸப் நம்பர் எனது ட்விட்டர், ஃபேஸ்புக் இவைகளில் மட்டுமே அச்செய்திகள் வெளிவரும். எனவே எனது கணக்கில் வெளியாகும் செய்திகள் மட்டுமே என்னுடையவை என உறுதி கூறினார். இவர் கடைசியாக எனது பெயரிலோ என்னுடைய புகைப்படம் வைத்து செய்திகள் வந்தால் கடுமையாக நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் தெரிவித்திருந்தார். மேலும் இதுவே எனது கடைசி எச்சரிக்கையாக இருக்கட்டும் என அறிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News