Kathir News
Begin typing your search above and press return to search.

காற்று மூலம் மக்களுக்கு பரவும் கொரோனா வைரஸ் - ஆதாரங்களுடன் விஞ்ஞானிகள் அறிவிப்பு.!

காற்று மூலம் மக்களுக்கு பரவும் கொரோனா வைரஸ் - ஆதாரங்களுடன் விஞ்ஞானிகள் அறிவிப்பு.!

காற்று மூலம் மக்களுக்கு பரவும் கொரோனா வைரஸ் - ஆதாரங்களுடன் விஞ்ஞானிகள் அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 July 2020 5:45 AM GMT

காற்றில் உள்ள சிறிய துகள்கள் மூலம் கொரோனா வைரஸ் மக்களிடம் பரவும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு மூக்கு மற்றும் வாய் மூலம் நீர் துளிகளால் கொரோனா வைரஸ் மக்களிடம் பரவும் என உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. ஆனால், காற்றில் மூலம் பரவும் என்பதற்கான ஆதாரம் இல்லை என அந்த நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மாரியம்மன் மரியா வான் கெர்கோவே ஜெனிவாவில் நிருபர்களிடம் பேசினார். அதில், காற்று வழியாக கொரோனா வைரஸ் மக்களிடம் பரவும் என்கிற சாத்தியத்தை பற்றி தெரிவித்தார்.

இந்த கொரோனா வைரஸ் பரவல் பற்றி 32 நாடுகளை சார்ந்த 239 விஞ்ஞானிகள் ஒரு கடிதத்தை உலக சுகாதார நிறுவனத்துக்கு எழுதி உள்ளனர். அதில் கொரோனா வைரஸ் காற்று மூலம் கொரோனா வைரஸ் மக்களிடம் பரவும் என்பதற்கான ஆதாரங்களை அனுப்பியுள்ளனர்.

இவர்கள் அறிவித்தபடி உலக சுகாதார நிறுவனம் காற்று மூலம் மக்களிடம் கொரோனா வைரஸ் பரவும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News