Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபர் சிக்கினாராம் - யார் அந்த நபர்?

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபர் சிக்கினாராம் - யார் அந்த நபர்?

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபர் சிக்கினாராம் - யார் அந்த நபர்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 July 2020 4:48 AM GMT

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபர் சிக்கினாராம் யார்? அந்த நபர்!!!

சென்னை எழும்பூரில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக சுமார் 12 மணி அளவில் நள்ளிரவில் ஒரு அழைப்பு வந்தது. அவர் பேசியிருப்பது விருகம்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடித்து விடும் என்றும் சொல்லிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.

இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து தலைமை காவலர்களுக்கு தகவல் அனுப்பினார்.

வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் விருகம்பாக்கம் ஸ்டேட் வங்கி காலனி 3-ஆவது தெரு, விருகம்பாக்கம் அபுசாலி தெரு ஆகிய இடங்களில் உள்ள இரு வீடுகளிலும் சோதனை செய்தனா்.

பல மணி நேரம் சோதனை செய்யும் அந்த வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தவறாக வதந்தியை பரப்பிய அந்த நபரை தேடி வந்த நிலையில் இப்போது அவர் விழுப்புரம் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் உள்ள புவனேஸ்வர் வயது(22) என்பதும் தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.புவனேஸ்வா் ஏற்கெனவே முதல்வா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக எச்சரிக்கப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. எனது போலீஸ் மீண்டும் எச்சரித்து அனுப்பினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News